திருவில்லிபுத்தூர், செப்.27 திருவில்லிபுத்தூர்அருகே பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து 2 மாணவர்கள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி செத்தனர். 10–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில்இருந்து திருவில்லிபுத்தூருக்கு இன்று காலை8.20மணிக்கு மினி பஸ் ஒன்றுபுறப்பட்டு சென்றது.அதில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சிறிது தூரம் சென்றதும் அரசு ஆரம்ப சுகதார நிலையம் அருகே உள்ள பள்ளத்தில் நிலைத்தடுமாறி மினி பஸ் கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அலறினார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்குவந்து சிலரை மீட்டனர்.மம்சாபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் கவிழ்ந்த இடத்தில் ஒரு கல்லூரிமாணவர், பள்ளிமாணவர் ஒருவர்உள்பட 4 பேர் பஸ்சுக்குள் அடியில் சிக்கி உயிரிழந்தனர். 4 பேரின் பலியானவர் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் 10–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக திருவில்லிபுத்தூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர் .அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவில்லிபுத்தூர் அருகே இன்று காலை விபத்து: பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து மாணவர்கள் உள்பட 4 பேர் நசுங்கி சாவு! 10–க்கும் மேற்பட்டோர் காயம்!!






