பசுமை தமிழக இயக்க நாளை முன்னிட்டு, அமைச்சர் கீதாஜீவன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்

தூத்­துக்­குடி, தூத்­துக்­குடி அரசு பாலி­டெக்­னிக்கல்­லூ­ரி­யில் பசுமை தமி­ழக இயக்கநாளை முன்­னிட்டு மரக்­கன்­று­களை அமைச்­சர் கீதா­ஜீ­வன்,மேயர் ஜெகன்பெரி­ய­சாமிஆகி­யோர் நட்டு வைத்­த­னர்.தமிழ்­நாடுஅர­சின் வனத்­துறை, தூத்­துக்­குடி வனக்­கோட்­டம் சார்­பில், தூத்­துக்­குடி அரசு பாலி­டெக்­னிக் கல்­லூ­ரி­யில் பசு­மைத்தமி­ழக இயக்கநாளை முன்­னிட்டு நடை பெற்ற மரக்­கன்­று­கள் நடும் விழா­வில், மாவட்டவரு­வாய் அலு­வலர் அஜய் சீனி­வாசன்,மாந­க­ராட்சி ஆணை­யர் மது­பாலன் முன்­னி­லை­யில், சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரிமைதுறை  அமைச்­சரும்  தூத்­துக்­குடி வடக்கு மாவட்ட திமுக செய­லா­ள­ரு­மான கீதா­ஜீ­வன், மேயர் ஜெகன் பெரி­ய­சாமி ஆகி­யோர் மரக்­கன்­று­களை நட்டு வைத்­த­னர். விழாவில் அமைச்­சர் கீதா­ஜீ­வன் பசு­மைத்தமி­ழ­கம் பாது­காப்பு குறித்து சிறப்­பு­ரையாற்றி­னார். விழாவில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் பிரபு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முத்துராஜ் தூத்துக்குடி வனசரக அலுவலர் சங்கரன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கல்லூரி போராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமாமாேர் கலந்து கொண்டனர்