சென்னை, செப்.23 ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு,வழக்கறிஞர் அருள், திருவேங்கடம்,திருமலை,பா.ஜ.க. நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல்,சிவசக்தி,தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன்,அ.தி.மு.க.நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர்,ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும்,பிரபல ரவுடிகள் பலரும் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரவுடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரவுடிகள், பல்வேறு அரசியல் கட்சியைச்சேர்ந்த பிரமுகர்கள் என இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம்(செப்.21)இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடிபுதூர்அப்புவை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சம்போசெந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டரவுடிகளையும்போலீசார் தேடி வந்தனர்.ஆந்திர மாநிலம் கடப்பாவில்தலைமறைவாகஇருந்த ரவுடிசீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து,சீசிங் ராஜாவை தனிப்படைபோலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.அந்த சமயத்தில் ஆயுதங்களை காட்டுவது போல் சென்ற சீசிங் ராஜா அங்குபதுக்கி வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டதாகத் தெரிகிறது. அவரது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த 2குண்டுகள் போலீஸ் வாகனத்தை தாக்கியுள்ளது.எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலில் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளார். பின்னர் அவனை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து சீசிங் ராஜா குண்டு பாய்ந்து பலியாகி விட்டார்.சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்,இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.சீசிங் ராஜாமீது 5 கொலை வழக்குகள் உள்பட 32க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், 2வது நபராக சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.திருவேங்க டம், காக்காதோப்பு பாலாஜியை தொடர்ந்து தற்போது மூன்றாவது என்கவுண்டராக சீசிங் ராஜாசுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய ரவுடி ‘சீசிங்’ ராஜா சுட்டுக் கொலை






