கொழும்பு, செப்.23 இலங்கையில் புதிய அதிபராக அனுரா குமாரதிசாநாயக இன்று பதவிஏற்றுக்கொண்டார். சிங்களர், தமிழர், முஸ்லீம்கள் என அனைத்து இலங்கையர் ஒற்றுமையே எனது புதிய தொடக்கம் என இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசாநாயக பேட்டியளித்துள்ளார்.இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) முன்னணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க (56)வெற்றி பெற்றார். இலங்கையின் 9வது அதிபராக இன்று பதவி ஏற்றார்.இலங்கைஅதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த தேர்தலில்,38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பொது ஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர் தான் முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர். முதல் கட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேல்வாக்குகளை பெறாத காரணத்தால், 2வது விருப்பவாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 2 மற்றும் 3வது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் அனுரமுதலிடத்தில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,இலங்கையின் 9வது அதிபராக மார்க்சிஸ்ட் தலைவர் அநுரகுமாரதிசாநாயக்க இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.அநுர கூறுகையில், “பலநூற்றாண்டு நாம் வளர்த்துவந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது.இந்த சாதனை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல.உங்களின் கூட்டு முயற்சியின் மூலமே இந்தவெற்றி சாத்தியமாகியுள்ளது. உங்களின் அர்ப்பணிப்பு நம்மை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. சிங்களவர்கள், தமிழர்கள்,முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும். புதிய மறுமலர்ச்சி இலங்கையை படைப்போம்”என்றார்.
இலங்கையின் 9–வது அதிபராக அனுரா குமார திசாநாயக பதவி ஏற்ப






