நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் DYFI, SFI ஆகிய மாணவர் இயக்கங்கள் சார்பாக ‘காத்திருப்பு’ போராட்டம் நடைபெற்றது.
ஆனால், தமிழக போலீசார் இந்த போராட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்து அனைத்து இடங்களிலும் மாணவர்களை டெல்லியைப் போல குண்டு கட்டாக, மிக மோசமான முறையில் கைது செய்துள்ளனர்.

















