முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அன்னதானம்

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அன்னதானம்

திருச்சி, ஜூன் 22:

தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தமிழக வெற்றிக் கழக இளைஞரணி சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 49-வது வார்டுக்கு உட்பட்ட சங்கிலியாண்டபுரம் சுப்பையா தெருவில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் கோல்பின் இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி நிர்வாகி அருண்குமார் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் தர்கா சௌகத் தலைமை தாங்கினார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெரால்டு மில்டன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு உணவு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.