மாநி­லங்­க­ளின் அதி­கா­ரத்தை பாஜக குறைக்­கி­றது -ராகுல் காந்தி பேச்சு!

ஸ்ரீநகர், செப்5 90 தொகுதி­களை கொண்ட ஜம்மு காஷ்மீ­ரில் சட்­ட­சபை தேர்­தல் மூன்று கட்­டங்­க­ளாக நடை­பெற இருக்கிறது.செப்­டம்­பர் 18-ந்தேதி முதற்­கட்ட வாக்குப்­ப­தி­வும், செப்­டம்­பர் 25ந் தேதி 2 ம் கட்ட வாக்­குப்­ப­திவும், அக்­டோ­பர் 1 ந்தேதி 3ம் கட்ட வாக்­குப்­ப­திவும் நடை­பெ­று­கிறது. முதற்­கட்ட வாக்­கு ப்­ப­திவுக்­கான வேட்­பு மனு தாக்­கல் முடிவ­டைந்­தது தேர்­தல் பிர­சாரத்தில் தலை­வர்கள் ஈடுபட்டு வருகின்­றனர்.ஜம்மு-­காஷ்மீ­ரில் முதற்­கட்ட வாக்குப்­ப­திவுக்கு இன்னும் சில நாட்­களே உள்ள நிலையில்,காங்­கிரஸ் எம்.பி. ராகுல்கந்தி தேர்­தல் பிர­சாரத்தில் ஈடு­பட்டு வருகிறார். டெல்லி­யில் இருந்து ஜம்மு-­காஷ்மீர் வந்தராகுல் காந்­திக்கு காங்­கி­ரஸ் கட்சி தொண்­டர்­கள் உற்­சாக வர­வேற்பு அளித்­த­னர்.இதை­ய­டுத்து, ராம்­பன் சட்­ட­சபை தொகு­திக்கு உள்­பட்ட பகுதி­யில் ராகுல் பிர­சாரத்தில் ஈடு காந்தி தேர்­தல் பட்டார். அப்­போது அவர்கூறி­ய­தாவது,”ஜம்மு-­காஷ்மீர் தேர்­த­லில் கொள்­கை­க­ளுக்கு இடை­யில் ­தான் மோதல்.இந்திய வரலாற்றில் முதல்மு­றை­யாக மாநி­லத்தின் அந்­தஸ்து பறிக்­கப்­பட்­டது. மாநிலம் முதல் மு­றை­யாக யூனி­யன் பிர­தே­ச­மாக மாற்­றப்­பட்­டது. மாநிலத்தை அழித்து மக்­க­ளின் உரி­மை­களைபறித்­தனர். ஜம்மு-­காஷ்மீ­ருக்கு அந்­தஸ்து  முத­லில் மாநில அந்­தஸ்து மீண்­டும் பெற்­றுத் தர வேண்­டும்.ஏனென்­றால்,   மாநில மட்­டும் பறிக்­கப்­ப­ட­வில்லை, மக்­களின் உரி­மை­கள், வளங்கள் என அனைத்தும் பறிக்­கப்­பட்­டுள்­ளது. 1947ம் ஆண்டு மன்­னர் ஆட்சி அகற்­றப்­பட்டு ஜனநா­யக அரசு கொண்டு வரப்­பட்­டது.ஆனால், ஜம்மு-­காஷ்மீ­ரில் இன்று மன்­னர் ஆட்சி உள்­ளது.  ஜம்மு-காஷ்மீர் கவர்­னர் தன்னை ஒரு மன்­னர் போல நினைத்து  செயல் ­படுகி­றார்.ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்­தஸ்து பெற்­றுத் தருவதே எஙகள் முதல் வேலை தேர்­த­லுக்கு முன்­ன­தாக மாநில அந்­தஸ்து பெற்றுத்தரவேண்­டும் என்றும், மாநில அந்­தஸ்­து­டன் தேர்­தல் நடத்­தப்­படவேண்­டும் என்றும் நாங்கள் விரும்பினோம். ஆனால், பாஜக­வுக்கு அதுபிடிக்­கவில்லை. மாநில அதி­கா­ரத்தை குறைத்து ,யூனி­யன் பிர­தே­ச­மாக மாற்­றும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது.பாஜக விரும்பினாலும்,விரும்­பா­விட்­டா­லும் ஜம்மு-­காஷ்மீரு க்கு மாநில அந்­தஸ்தை இந்தியா கூட்­டணி பெற்றுத்தரும். அவ்­வாறு ” இவர் கூறினார். இதனை தொடர்ந்து, அனந்த்­நாக் மாவட்­டத்­திக்­கு உள்ள டூரு பகுதி செல்கிறார். காங்­கி­ரஸ் பொதுச்செய­லா­ளர் மற்றும் முன்­னாள் மந்திரி குலாம் அக­மது மிர்-ஐ ஆத­ரித்து மெகா பொதுக்­கூட்­டத்தில் பேச உள்ளார்.