“கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ் நாட்டில் தான் முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: “அமெ­ரிக்­கா­வில் இருந்­
தா­லும் தமிழ்­நாடு பற்­றி­யே தான் என் மனதுசிந்­திக்­கும்,பார்வை கண்­கா­ணி க்­கும்”என்று தனது அமெ­ரிக்­கப்பய­ணத்தை ஒட்டி திமுக தொண்­டர்­க­ளுக்கு கடி­தம்
ஒன்றை எழு­தி­யுள்­ளார் தமி­ழக
முதல்­வர் மு.க.ஸ்டாலின்.அந்­தக் கடி­தத்­தின் விவரம் வரு­மாறு: கடல் கடந்து சென்­றா­லும் கவன மெல்­லாம் தமிழ்­நாட்­டில்­தான்!.
அன்னை நிலம் பயன் பெறு­வ­தற்­கான பய­ணங்­க­ளில் ஒன்­றாக, உங்­க­ளில் ஒரு­வனான நான் அமெ­ரிக்­கா­வுக்குப் பய­ணிக்­கி­றேன்.
முந்­தைய ஆட்­சிக்­கா­லத்தில் தேங்­கிக்கிடந்த தொழில்­வளர்ச்­சியை மீட்­டெ­டுத்து,அதற்­கேற்ற வகை­யில்
முத­லீ­டு­களை ஈர்த்து, புதிய தொழிற்­கட்­ட­மைப்­பு­கள் வாயி­லாக, மாநி­லத்­தில் பர­வ­லான அள­வில்
தர­மான வேலைவாய்ப்­பு­களை உரு­வாக்கி, தமிழ் நாட்­டைப் பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னேற்ற வேண்
டும் என்ற நோக்­கத்­து­டன் தான் ஒருடிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்
என்­கிற பொரு­ளா­தார இலக்கை
நமது அரசு நிர்­ண­யித்து.அதற்­கான
பணி­களை முனைப்­பாக­வும் சிறப்­பாகவும் மேற்கொண்டு வரு­கி­றது. அந்த முனைப்­பின் தொடர்ச்சியாக­த்தான் இன்று (ஆகஸ்ட் 27) தமிழ்
நாட்­டின் முத­ல­மைச்­சர் என்ற முறை­யில் நான் அமெ­ரிக்­கா­வுக்­குப்பய­ணிக்­கி­றேன்.
திமுக ஆட்சி அமைந்­த­தி­லி­ருந்தே
தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்­சிக்­கேற்ற கொள்கை வகுக்­கப்­பட்டு,
பல்­வேறு துறைகள் சார்ந்த முத­லீ­டு­களைக் கொண்டு வந்­த­ப­டியேஇருக்­கி­றோம்.தேடி வரு­கின்ற முத­லீ­டுகளை­ப் போலவே, தேடிச்சென்று முத­லீ­டு­களை ஈர்க்­கும் பணி­யை­யும், இன்றைய உல­ளாகவிய பொரு­ளா­தா­ரச் சூழ­லில் உள்ள போட்­டி­களைக் கருத்­திற்கொண்டு செய­லாற்றி வரு­கி­றது நமது அரசு.தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராகப் பொறுப்­பேற்ற பிறகு, ஐக்­கிய அரபு அமீ­ர­கம், சிங்­கப்­பூர், ஜப்­பான்,ஸ்பெயின் ஆகிய நாடு­களுக்­குப் பய­ணம் மேற்­கொண்டு நம் மாநி­லத்­திற்­கான முத­லீ­டு­களை ஈர்க்­கும் புதிய தொழிற்­சாலைகளை உரு­வாக்­கும் வகை­யில் புகழும் தர­மும் மிக்க பன்னாட்டு நிறு­வனங்­க­ளு­டன்புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள்போடப்­பட்­டுள்­ளன.

2024 ஜனவரி மாதம் சென்­னை­யில் நடைபெற்ற உலக முத­லீட்­டா ளர்­கள் மாநாட்­டில் பன்­னாட்டு நிறு­வனங்­கள்பல­வும்பங்கேற்று,புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களை மேற் கொண்­ட­தன் வாயி­லாகக் கடந்த மூன்­றாண்­டு­க­ளில் ஏறத்தாழ 10 இலட்­சம் கோடி ரூபாய்க்கானமுத­லீ­டு­களைத் தமிழ்­நாடு ஈர்த்­துள்­ளது. இந்­தப்புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களைச்செயல் ­ப­டுத்­து­கிற வகையில்,ஒருங்­கி­ணைப்­புப் பணி­களை மேற்கொண்டு,அவற்றை முறையாகக் கண்கா­ணித்து, தொழிற்­சாலைகளைத் தொடங்கி, வேலைவாய்ப்பு அமைக்­கும் பணி­யை­யும் அரசு மேற்­ கொண்டு வரு­கி­றது.தொழிற்­சாலைகள் அமைப்­ப­தற்­கேற்ற சூழல்­களை உரு­வாக்­கிக் கொடுத்து, உடன­டி­யாக அடிக்­கல்நாட்டு விழாக்­களையும்,அதன் தொடர்ச்­சி­யாக விரைவாக தொழிற்­சாலைத்தொடக்க விழாக்­க ளையும் அரசு மேற்கொண்டு வரு­கி­றது. கடந்த 21.8.2024அன்று சென்­னை­யில் நடைபெற்ற தமிழ்­நாடு முத­லீட்­டாளர் மாநாட்­டில் மட்­டும ரூபாய் 17,616 கோடி மதிப்­பி­லான 19 நிறைவடைந்த திட்­டங்­கள் தொடங்கி வைக்­கப்­பட்டது­டன் ,ரூபாய் 51,157 கோடி மதிப்­பி­லான 28 திட்­டங்­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டப்­பட்டு, 1இலட்­சத்து 6 ஆயி­ரத்து 803வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.அர­சின் தொடர்ச்­சி­யான முயற்­சி­களால் தமிழ்­நாட்­டின் பல்­வேறு மாவட்­டங்­களி­லும் கடந்த 3 ஆண்­டு­களில் நேர­டி­யாகவும்         மறை­மு­கமாகவும் 31இலட்­சம் பேருக்­கான வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கித் தரப்­பட்­டுள்­ளன.  புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் செய்­து­ கொண்டபன்னாட்டுநிறு­வனங்­கள் தமிழ்நாட்­டில் தொழில் தொடங்கு­வ­தில்முனைப்­பாக செயல்­படுவதுடன் ,மேலும் பல நிறு­வனங்­களும் தமிழ்­நாட்­டில் தொழில் தொடங்­கு­வ­தில் ஆர்­வம் காட்­டும் வகையில், முத­லீட்­டாளர்­க­ளின் முதல் முகவரி தமிழ்­நாடு என்ற அழுத்­தமான அடையாளத்­தைத் அரசு வெற்­றி­கர­மாக உரு­வாக்­கி­யுள்­ளது.

ஒரு டிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் என்ற பொரு­ளாதார இலக்­கு­டனானப் பயணத்­தில் மற்றொருகட்­டம்­ தான்,உங்­க­ளில்
ஒரு­வனான நான் மேற்கொள்ளும் இந்த அமெ­ரிக்­கப்பய­ணம்.ஆகஸ்ட் 29 அன்று சான்­பி­ரான்­சிஸ்கோ­வில் நடைபெறும் முத­லீட்­டாளர் சந்­திப்­பில் பங்­கேற்று உரைநிகழ்த்­து­வ­து­டன், ஆகஸ்ட் 31 அன்று புலம்­பெய
ர்ந்த தமி­ழர்­களைச் சந்­தித்து பேசு­
கி­றேன். அதன்­பின், செப்­டம்­பர் 2ஆம் தேதி சான்­பி­ரான் ­சிஸ்கோ ­வி ­லிருந்து சிகாகோ செல்­கி­றேன். 10நாட்­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வில் உள்ள முக்­கிய நிறு­வன முத­லீட்­டா ளர்­களை சந்­தித்து, தமிழ்­நாட்­டில் முத­லீடு செய்து, தொழில் தொடங்­கிட அழைப்புவிடுக்­கிறேன். “ஃபார்ச்­சூன் 500” நிறு­வனத்தின்
தலைமை நிர்­வா­கி­களை சந்­தித்து உரையாட வி­ருக்­கி­றேன். இவைய
னைத்­தும் தமிழ்­நாடு தொழில்­வளம் பெற­வும், தமி­ழர்­களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்­திட­வுமான முயற்­சி­களாகும்.தொழில் முத­லீடு சார்ந்த பய­ணம் என்­றா­லும், அமெ­ரிக்­கா­வாழ் தமி­ழர்­க­ளுக்கென்று தனி­யாக நேரத்தை ஒதுக்­கித் தராமல் இருக்கமுடி­யுமா? செப்­டம்­பர் 7ஆம் நாள் சிகாகோவில் தமி­ழர்­க­ளு­டனான மாபெரும் சந்­திப்பு நிக­ழ­வி­ருக்­கி­றது.ஏறத்­தாழ 43 ஆண்­டு­களுக்­குப் பிறகு, தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் அது­வும் திரா­விட முன்­னேற்­றக்கழ­கத்­தின் சார்­பில் உங்­களில் ஒரு­வனான நான்அமெ­ரிக்கா வாழ் தமி­ழர்­களைச் சந்­திப்­பது எனக்­கும் அவர்­க­ளுக்­கும் மிகுந்த மகிழ்ச்சிதரும் நிகழ்ச்­சி­யாக அமை­யும் என்­ப­தில் உறு­தி­யான நம்­பிக்கை கொண்­டி­ருக்­கிறேன்.

அமெரிக்­கப்பய­ணத்திட்­டங்­களை
ஒருங்­கிணைப்­ப­தற்­காக தொழில்­மு­த­லீட்டு ஊக்­கு­விப்பு மற்­றும் வர்த்­தகத்துறை அமைச்­சர் டி.ஆர்.
பி.ராஜா முன்­கூட்­டியே அங்குச் சென்று ஏற்­பா­டு­களை கவ­னித்து வரு­கி­றார். ஆகஸ்ட்27தொடங்கி செப்­டம்­பர் 14 வரை­யி­லான இந்­
தப்பயண நாட்­க­ளின் நோக்கம்,
தமிழ்­நாட்­டின் தொழில்­வளர்ச்சி அடுத்து வரும் பல தலை­மு­றைக
ளுக்­குப் பயன் தரு­வ­தாக இருக்­கவேண்­டும் என்­ப­து­ தான். முத­ல­மைச்­சர் அயல்­நாடு சென்­றி­ருந்­தா­லும்,தமிழ்­நாட்­டில் எந்­த வொரு பணி­யும் தடை­ப­டாமல் நடைபெ­று­கி­றது என்று மக்கள் தரும் சான்­றி­தழே அர­சுக்­குப் பெருமை சேர்ப்­ப­தாகும். அந்­தச் சான்­றி­தழை அமைச்­சர்­க­ளும், மதிப்­பிற்­கு­ரிய கட்சி நிர்வா­கிக­ளும் பெற்­றுத் தரு­வீர்­கள் என்ற நம்­பிக்­கை­யு­டன்­தான் பொறுப்பை உங்­க­ளி­டம் பகிர்ந்து செல்­கி­றேன். அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தி­லும் மாவட்­டச்செய­லாளர்­கள் கூட்­டத்­தி­
லும் ஏற்­கெனவே இதனை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றேன்.ஆட்­சிப் பணி­யும், கழ­கப்பணி­யும் தொய்­வின்­றித்
தொடர்­வ­தற்கு ஏற்ற வகையில்
ஒருங்­கி­ணைப்­புக்குழுக்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.அவற்­று­டன்
ஒருங்­கி­ணைந்து ஒவ்வொரு­வ­ரும் தங்­கள் கடமையினை கண்­ணி­யத்­து­டன் நிறைவேற்ற வேண்­டும்.
கட்­டுப்­பாடு காக்­கின்ற வகை­யில்,
செய­லில் வேகம்-சொற்­க­ளில் கவனம் என்­பதை மன­தில் நிறுத்தி
செய­லாற்­றுங்­கள்.நம்மீது விமர்­சனம் செய்ய விரும்­பு­வோர்,
விவா­தம் நடத்­து­வோர் ஆகி­யோ­ருக்குஆட்­சி­யி­லும் கட்­சி­யி­லும் நாம் நிறைவேற்­றும் பய­னுள்ள செயல்­களே பதில்­களாக அமையட்­டும்.
வார்த்­தைகளால் பதில் சொல்லி அவர்­கள் எதிர் பார்த்­துக் காத்­தி­ருக்­கும் வாய்ப்பை உரு­வாக்­கித் தர
வேண்­டி­ய­தில்லை. அமெ­ரிக்­கா ­வில் இருந்­தா­லும் தாய்­வீ­டான தமிழ்­நாடு பற்­றி­யே­தான் என் மனது சிந்­திக்­கும். பார்வை கண்­கா­ணிக்­கும். தமிழ்­நாடு சிறக்க அயல்­நாட்­டுக்­குச்சிறகு விரிக்­கி­றேன்.
உங்­கள் வாழ்த்­து­க­ளு­டன் பறக்­கி­றேன். இவ்­வாறு அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ளதது.