விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் நடுவராக இருப்பவர் மாதமபட்டி ரங்கராஜ். அவர் ஜாய் கிரிசில்டா என்ற ஆடை வடிவமைப்பாளரை இரண்டாம் திருமணம் செய்து இருப்பதாக புகைப்படங்கள் வைரல் ஆனது. மேலும் ஜாய் கிரிசில்டா ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாம் திருமணம் பற்றி எந்த அறிவிப்பையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடவில்லை, தனது முதல் மனைவி உடன் இருக்கும் போட்டோவை மட்டும் சில மாதங்களுக்கு முன் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் பங்கேற்று இருக்கிறார். முதல் மனைவி உடன் இருக்கும்போதே தான் அவர் இப்படி இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறாரா என பலரும் தற்போது அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.






