முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்
சென்னை: “இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணி யின் எழுச்சியும்,உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தி திணிப்பை முறியடிக்க திமுக வும், தமிழக மக்களும் தலை முறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகப் பள்ளிகளில் 3-வது மொழி யாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சட்டத்துக் குப்புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்து கொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2-ம் முறையாகப்பின் வாங்கி இருக்கி றார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும்,உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன, இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக் கின்றன, இந்தி பேசாத முன்னேறியமா நிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள் என்று ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது.மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழகத்தைப்பழி வாங்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச்சட்டப் பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழக மக்கள்நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது.இந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல் திட்டத்தைப் புரிந்து கொள் ளாமலும்,‘இந்தி படித்தால் வேலை கிடைக்கும்’என்ற வார்த்தைகளைக்கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும். தமிழுக்கு நிதி ஒதுக்கீட் டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத் தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவத்தை நீடிக்கவிட மாட்டோம்.தமிழுக்கும், தமிழகத்துக்கும் பாஜக செய்து வரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும், அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக் கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித் துள்ளார். மகாராஷ்ராவில் நடந்தது என்ன? முன்னதாக, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான, பாஜக,சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு,சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்தியது. 3-வது மொழியாக இந்தி மொழி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா வும் (எம் என் எஸ்) கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மகாராஷ்டிர அரசு எங்கள்மீது இந்தி யை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு மாநிலம் முழுவதும் பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து,மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது.மகாராஷ்டிர மாநில அரசின் இந்த முடிவை அடுத்து, அதற்கான வெற்றி விழா மும்பையில் சிவசேனா, எம்என்எஸ் இணைந்து நடத்தின.இந்நிகழ்ச்சியில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரே வும் ஒன்றாக இணைந்து மேடையில் தோன் றினர்.அப்போது, அரங்கத்தில் இருந்த இரண்டு கட்சி களின் தொண்டர்களும் உற்சாகத்தில் கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.






