வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து அலுவலக பணியாவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகளை பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா வழங்கினார்,
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சித்ரா சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத் தலைவர் வசந்த சந்திரா, பேரூராட்சி கழக துணை செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி, பேரூராட்சி கழக பொருளாளர் கவுன்சிலர் முத்துக்குமார், துணை செயலாளர் விசாலாட்சி, ஆதிதிராவிட நல அமைப்பாளர் செல்லத்துரை,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ், துணை பொதுச்செயலாளர் கஜேந்திரன் கவுன்சிலர் வெங்கடேஸ்வரி, கங்காராஜேஸ்வரி, அனந்தராமன் சந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.






