கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பெய்து வந்ததால் திற்பரப்பு அருவியில்
குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த நான்கு நாள் தடைக்கு பிறகு குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும்
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து திருப்பரப்பு அருவியில்
வார விடுமுறை நாளான நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் திருப்பரப்பு அருவியில் கொட்டும்
தண்ணீரில்நீண்ட நேரம்நீராடிமகிழ்ச்சிஅடைந்தனர்.






