உமர் அப்துல்லா முதல்­வ­ராக அதிகா­ரபூர்வ ஆத­ரவை வழங்கியது காங்கிரஸ்!

ஸ்ரீநகர், அக்.12 ஜம்மு காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி புதிய அரசை அமைக்க காங்­கி­ரஸ் கட்சி தனது அதி­கா­ரப்­பூர்வ ஆதரவினை வெள்­ளிக்கிழமை (அக்.11) தெரிவித்­தது. 2019ல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்­தஸ்து ரத்து செய்­யப்­பட்ட பின் முதல் முறை­யாக உமர் அப்துல்லா கூட்­டணி அரசின் முதல்­வ­ரா­கி­றார்.ஜம்மு காஷ்மீர் காங்­கி­ரஸ் தலை­வர் தாரிக் ஹமீதுகர்ரா உட்­படக் ­கட்சி­யின் 6 சட்­டப்­பே­ரவை உறுப்பினர்­கள் கலந்து கொண்ட காங்­கிரஸ் சட்­டப்­பே­ர­வைக் கட்சிக் கூட்­டம் இன்று (அக். 11) நடந்தது. அதில் சட்­டப்­பே­ரவை உறுப்பி­னர்­கள் தீர்­மா­னம் ஒன்­றினை நிறை­வேற்றி, தேசி­யவாத காங்­கிரஸ் கட்சிக்­கான ஆதரவு கடித்தில் கையெ­ழுத்­திட்­ட­னர். இது குறித்து தாரிக் ஹமீது கர்ரா கூறு­கை­யில்,”காங்­கிரஸ் சட்­டப்­பேரவை கட்சிக் கூட்­டத்­தில் ஒருமனதாக ஒரு தீர்­மா­னம் நிறை­வேற்றி சட்­டப்­ பேரவை கட்சி தலை­வரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை மத்­திய தலைமைக்கு வழங்­கியுள்­ளோம். தேசிய மாநாட்டு கட்சிக்கு எங்­களின் ஆதர­வி­னை­யும் வழங்­கியுள்­ளோம். அதற்­கான கடி­தத்தை அவர்­களிடம் வழங்க உள்­ளோம். உமர் அப்துல்­லாவை முதல்­வராக ஏற்றுக்­கொள்கி­றோம். அரசு அமைந்த பின்பு இலாக்­காக்­கள் குறித்து விவா­தித்து முடி­வெ­டுப்­போம். இலாக்­காக்­களில் எந்த வித்­தியா­சமும் இல்லை.அது­போன்ற எந்த கோரிக்­கை­க­ளும் இல்லை. இண்­டியா கூட்­ட­ணியின் உணர்வு நலக்­காகனுக்­காக , ஜம்மு காஷ்மீரின் நாங்­கள் தேசிய மாநாட்டு கட்­சியை ஆதரிக்கி­றோம்.ஒரு நல்ல நோக்­கத்­துக்­காக உருவாக்­கப்­பட்ட கூட்­டணி இது. ஆட்சி அமைந்­ததும் அவர்­களு­டன் அமர்ந்து என்ன மாதி­ரியான ஆட்சியை உரு­வாக்குவது என்­பது குறித்து விவா­திப்­போம்.இந்த கூட்­ட­ணியின் ஆன்மா, எண்ணிக்கை மற்றும் அமைச்­சர் பதவி­களுக்கு அப்­பாற்­பட்­டது”என்று தெரிவித்­தார்.இதனி­டை யே ஜம்முகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரு­வதற்கு நாளை (சனிக்கி­ழமை) ஆளு­நர் மாளி­கைக்கு செல்ல இருக்கி­றது. இந்­த­நி­லையில், தேசிய மாநாட்டு      கட்­சிக்கு மேலும் ஒரு எம்­எல்ஏ தனது ஆதரவினை வழங்­கியுள்­ளார். ஜம்மு காஷ்மீரில் மொத்­த­முள்ள 90 தொகுதி­க­ளில் இண்­டியா கூட்­ட­ணியின் எண்­ணிக்கை 52 ஆக வலு­வான நிலையில் உள்­ளது. அரவிந்த் கேஜ்ரிவா­லின் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய மாநாட்டு கட்சிக்­கான ஆதரவு கடிதத்தை, துணைநிலை ஆளு­நர் அலுவல­கத்­தில் கொடுத்துள்­ளது. ஆம் ஆத்மி கட்சி செய்­தித் தொடர்­பா­ளர்,”ஜம்மு காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும்” என்று தெரி­வித்­துள்­ளார். ஜம்முவின் தோடா தொகுதியில் போட்டியிட்ட அக்­கட்சி­யின் வேட்­பா­ளர் மேஹ்­ராஜ், பாஜக வேட்­பா­ளர் கஜாய்சிங்ராணாவை தோற்­கடித்­திருந்­தார்.இதனி­டையே, சட்­டப்­பே­ரவை உறுப்பினர்­க­ளின் எண்ணிக்கை போதிய அளவில் இருப்­பதால், தேசிய மாநாட்டுகட்சியின் தலை­வர் பரூக்அப்துல்­லாவை மாநிலங்க­ள­வைக்கு தேர்ந்­தெடுத்து அனுப்பதிட்­ட­மிட்டிருப்­ப­தாக வட்­டா­ரங்­கள் தெரிவித்துள்­ளன. யூனியன் பிரதேசத்­தில் இருந்து நான்கு மநிலங்­களவை உறுப்பினர்­காளை அனுப்ப முடி­யும். சமீபத்­தில் நடந்த ஜேகே­என்சியின் சட்­டப்­பே­ர­வைக்கட்சி கூட்­டத்­தில் இதற்­காக  பரூக் அதுல்­லாவின் பெயர் அடிபட்­டதாக  தகவல் அறிந்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.