சென்னை, அக். 8 சென்னை மெரினாவில் நேற்றுநடந்தவிமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர்
திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர்பலியாகினர். இது தொடர்பாக
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
*விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை தேவை.
*நிகழ்ச்சிஏற்பாட்டில் குறைபாடுகள்
ஏதும் இருந்ததா? என விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* வெயிலின் கொடுமையில் பலியானவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
* கூட்ட நெரிசலால் அல்ல வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே
உயிரிழப்பு என தெரிய வந்துள்ளது.
* வெயிலின் கொடுமையால்
ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது
குறித்து தீவிரமாக நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
5 பேர் உயிரிழந்த விவகாரம்- உயர்மட்ட விசாரணை தேவை: திருமாவளவன் பேச்சு!






