சென்னை,செப்26 பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.பள்ளி அருகே கூல்லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்யவேண்டும் என்று ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.மாணவர்கள்,இளைஞர்களின் எதிர் காலத்தை சீரழிக்கும் குட்கா,கூல் லிப் போன்ற பொருட்களை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வழக்கில் முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்யவேண்டும் என்று ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குட்கா பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டத்தில், திருத்தங்கள் செய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை விற்க தடை- நீதிமன்றம் உத்தரவு!






