சென்னை,செப்.24–தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பான வழக்கில் சென்னையில்10 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 12இடங்களில் இன்று காலைமுதல் என்.ஐ.ஏ.அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் ஒருயூடியூப் சேனலில், தடைசெய்யப்பட்ட ஹிஸ்பு – உத்தஹீர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கண்டறிந்து,விசாரணை செய்த னர்.இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர் டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்ற பெயரில் அந்த யூடியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி,மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜானிஜான்க்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி, தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்ததும் தெரியவந்தது.இது தொடர்பாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து,ஹமீது
உசேன், அவர் சகோதரர் அப்துல்ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனர். ஹமீது உசேன் கவுரவ பேராசிரியராக பணியாற்றி கொண்டு ஹிஸ்பு உத்தஹீர் இயக்க ஆதரவாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.இந்த வழக்குத் தொடர்பாக 10 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.அதில் முக்கியமான ஆவணங்களை கைப்பற்றப்பட்டது.பின் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், தேச விரோத செயலுக்குரிய சட்டப்பிரிவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புபிரிவுசட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்ததால் வழக்கின் விசாரணை என்.ஐ.ஏவுக்கு விரைவில் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருநதது.ஏனெனில் இச் சட்டப்பிரிவுகளை ஒரு வழக்கில்
சேர்க்கப்பட்டால், அந்த வழக்கின் விசாரணையை என்ஐஏ நேரடியாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவிசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் இந்த வழக்கின்விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு அண்மையில் மாற்றப்பட்டு, ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.இதையடுத்து சென்னை என்.ஐ.ஏ. அதிகாரிகள்,புதிதாகஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.சர்வதேச தொடர்புகள் இந்த வழக்கில் இருப்பதாக என்.ஐ.ஏ. சந்தேகிப்பதால்,விரைவில்இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனகூறப்பட்டது.இந்நிலையில், ஹிஸ்புல் உத்தஹிர் இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து தொடர்பாக இன்று என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அதன்படி சென்னையில்,ராயப்பேட்டை,வண்ணாரப்பேட்டை,திருவல்லிக்கேணி,ஏழுகிணறு,நீலாங்கரை,வெட்டு வாங்கேணிமற்றும்புறநகர் பகுதிகளான தாம்பரம்,வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட 10 பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரை, வெட்டுவாங்கேணி குறுக்குத்தெ ருவில் உள்ள வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதேபோல, தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில் 3 இடங்களிலும், பெரும்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களிலும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் நாகர்கோவில், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில்,இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில்என்.ஐ.ஏ.அதிகாரிகள் தொடர்புடையநபர்களின் வீடுகள்,அலுவலகங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.பல மணி நேரமாகநடைபெறும் இந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய
ஆவணங்கள் கைபற்றபட்டதாக என்.ஐ.ஏ.தரப்பில்கூறப்படுகிறது. சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை நாகர்கோவில் உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை! தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கில் தேடுதல் வேட்டை!!






