சிவகங்கை,செப்.11 சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.முன்னதாக சிவகங்கை விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் துவக்கிவைத்தார். அதன் பின்னர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் பல்வேறு துறைஅதிகாரிகளிடம் மத்திய, மாநில அரசுகளின், திட்டங்களை செயல் படுவது குறித்து கேட்டறிந்து, சில ஆலோசனைகளை தெரிவித்தார். பினனர் செய்தியாளர்களை சந்தித்த போது, மதுரையைவிட சிவகங்கையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றதாகவும், நிறை வேறப்பட்ட அரசு திட்டங்கள் குறித்தும்,இன்னும் நிறை வேற்றப்படமல் உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்ததகவும், விரைந்து அரசு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுகக அறிவுரை வழங்கியதாகவும், ஆய்வுப்பணிகள் குறித்து முழு அறிக்கையும் முதல்வரிடம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். விசிக மதுஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களது விருப்பம் அதனை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.






