முத்­த­லாக் தடை சட்­டம்- உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் மத்­திய அரசு பிர­மாண பத்­தி­ரம் தாக்­கல்!

புது டெல்லி , ஆக. 20-: முஸ்­லிம் சமு­தா­யத்­தில், மூன்று முறை’தலாக்’ என்று கூறி ஆண்­கள் தங்­கள் மனை­வியை விவ­கா­ரத்து செய்­யும் வழக்­கம் நடை­ மு­றை­யில் உள்­ளது. இந்த முத்­தலாக் நடை­ முறை அர­சி­யல் சட்­டத்­திற்கு விரோ­த­ம­னது என்று 2017 ஆம் ஆண்டு உச்­ச­நீ­தி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யது.இதை­ய­டுத்து 2019ஆம் ஆண்டு முத்­தலாக்­குக்குதடை விதிக்­கும் முஸ்­லிம்பெண்­கள் திரு­மண உரி­மை­கள் பாது­காப்பு மசோதா பாரா­ளு­மன்­றத்­தில் நிறைவே ற­றப்­பட­டது .இந்த சட்­டத்­தின் மூலம் முத்­த­லாக் வ ாயி­லக விவா­க­ரத்து செய்­வோர் மீது சட்­ட­ ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.இந்­நி­லை­யில் முத்­த­லாக்­குக்கு தடைவிதிக்­கும் சட்­டத்தை எதிர்த்து உச்­ச­நீ­தி ­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.அந்த மனு­வில், மத்­திய அரசு கொண்டு வந்த முஸ்­லீம் பெண்­கள் (திரு­மண உரி­மை­கள்பாது­காப்பு)சட்­டம், 2019 அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரா­னது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இந்த மனு­விற்கு மத்­திய அரசு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் விரி­வான பிர­மாணபத்­தி­ரம் தாக்­கல் செய்­துள்­ளது.அதில், திரு­ம­ண­மான முஸ்­லீம்பெண்­க ­ளின் அடிப்­படை உரிமை மற்­றும் பாலின சமத்­து­வத்­திற்கு முஸ்­லிம் பெண்­கள் திரு­மண உரி­மை­கள் பாது­காப்­பு­சட்­டம் உத­வு­கி­றது.முத்­த­லாக் நடைமுறை அர­சி­ய­ல­மைப்­பின் கீழ் பெண்­க­ளுக்கு உத்­த­ர­வா­தம் அளிக்­கப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மை­களை மீறு­கி­றது.முத்­த­லாக் நடை­மு­றையா­னது திரு­ம­ணம் எனும் சமூக அமப்­பிற்கு ஆபத்­தா­னது .அந்த நடை முறை முஸ்­லீம் பெண்­களின் நிலை­மயைமிக­வும் பரி­தா­ப­க­ர­மா­ன­தாக ஆக்­கு­கி­றது. முத்­த­லாக்­கால் பாதிக்­கப்­பட்ட பெண்­கள் காவல்­து­றையை அணு­கு­வதைத் தவிர அவர்க­ளுக்கு வேறுவழி­யில்லை.அதே சம­யம் இந்தசட்­டத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டவர்­களுக்கு தண்­டனை­கள் இல்­லா­த­தால் கண­வர்­கள் மீது நட­வடிக்கை எடுக்க முடி­யாத நிலைக ாவல் ­து­றை­யி­ன­ருக்கு ஏற்­ப­டு­கி­றது.இதைத்தடுக்­கும் வகை­யில் கடு­மை­யான சட்ட விதி­களை உரு­வாக்க வேண்­டிய தேவை உள்­ளது”என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.