நாகர்கோவில் ஆக 20 குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னார்குளம் ஆல்டிக்சோப்புகம்பெனிஅருகில் வைத்து 18ம்தேதி இரவு கரும்பாட்டூர் ஊரை சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வம் (எ) செல்வமுருகன்38 என்பவர் தன்னை கத்தியால் தாக்கி மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஞ்சு கிராமம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.இந்நிலையில் அவர் தேரூர் அருகில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்சுசீந்திரம் வட்ட காவல்ஆய்வாளர் ஆதம் அலி,அஞ்சுகிராமம் காவல் உதவி ஆய்வாளர் லிபிபால்ராஜ் தலைமையில் போலீசார் குற்றவாளி தலைமறைவாக இருந்த இடத்திற்கு வந்தனர்.போலீசார் தன்னை சுற்றி வளைத்திருபபதை அறிந்த குற்றவாளி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
உடனே உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் அவரை பிடிக்க முயன்ற போதுதான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் உதவி ஆய்வாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.எனவே ஆய்வாளர் ஆதம் அலி தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுசரணடையும் படி எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் சார்பு ஆய்வாளர் லிபிபால்ராஜை வெட்டிவிட்டு தப்ப முற்பட்ட போது காவல் ஆய்வாளர் வலது காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டு குற்றவாளி கீழே விழுந்துள்ளார். உடனடியககாயம் பட்ட குற்றவாளி மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோரை காவல் ஆய்வாளர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இருவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி செல்வம் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் A+ வகை சரித்திரபதிவேடு குற்றவாளி யாவார். மேலும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 28 குற்ற வழக்குகள் உள்ளன.அதில் 06 கொலை வழக்குகளும் 07 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். மேலும் இவர் மீது பல்வேறு மாவ ட்டங்களில் 05 நீதிமன்ற பிடியாணைகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்!






